பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கடந்த 1995 மார்ச் 25-இல் நடைபெற்ற பேரவைத் தேர் தல் வாக்குப்பதி வின் பொழுது பீகார் மக்கள் கட்சி சார்பாக பிரபுநாத் சிங் போட்டியிட்டார். வாக்களித்துவிட்டு திரும்பிய வாக் காளர்களிடம், யாருக்கு வாக்க ளித்தீர்கள் என்று விசாரித்த அவர், மற்று கட்சிக்கு வாக்களித்தது குறித்து தெரிந்ததும் 3 பேரை தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்த னர். ஒருவர் படுகாயமடைந்தார். கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், அபய் எஸ்.ஒகா, விக்ரம் நாத் ஆகியோரை கொண்ட அமர்வு பிரபுநாத் சிங்கை கடந்த ஆக.18-இல் குற்றவாளியாக அறிவித்து, அவரை விடுதலை செய்த கீழமை மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற உத் தரவுகளைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தண்டனைக்கான தீர்ப்பில் பிரபுநாத்துக்கு ஆயுள் தண்டனை அளித்து, உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட தற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறையும், காயமடைந்தவருக்கு இழப்பீடாக வழங்க ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரட்டைக் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பிரபுநாத் சிங் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி யைச் சேர்ந்த மக்களவை முன் னாள் எம்பி என்பது குறிப்பிடத் தக்கது.