tamilnadu

img

இராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

இராஜபாளையம், ஏப்.20- இராஜபாளையம் நகராட்சியில் தமிழ கத்திலேயே அதிகமான வரி விதிப்பு அம லில் உள்ளது. வராத தாமிரபரணி தண்  ணீருக்கு அதிகமான வரி தீர்மானிக்கப் பட்டது. இதனைக் கண்டித்து ராஜபாளை யத்தில் உள்ள பல தன்னார்வ அமைப்புகள் இணைந்து வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு என துவக்கி மார்ச் 28ஆம் தேதி முற்றுகை போராட்டத்தை அறிவித்தன. இந்நிலையில் வராத தாமிரபரணி தண்ணீ ருக்கு விதிக்கப்பட்ட குடிநீர் கட்டணம் ரத்து  செய்யப்பட்டது. ஏப்ரல் 26 ஆம் தேதி போராட்டக்குழுவினரோடு சட்டமன்ற உறுப்பினர், நகர் மன்ற தலைவர், வட்டாட்சி யர், நகராட்சி ஆணையாளர், காவல் ஆய்வா ளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்  20 ஆம் தேதிக்குள், நகர்மன்ற கூட்டத்தில்  நிறைவேற்றிய தீர்மானப்படி ஐந்து சதவீதம்  முதல் 25 சதவீதம் வரை வரியை குறைத்திட அரசாணை பெற்று அமல்படுத்தப்படும் என்  றும், அடிப்படை வரிவிகிதத்தை குறைத்திட  சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வரியை குறைத்திட நடவ டிக்கை எடுப்போம் என்றும் எழுத்துப்பூர்வ மாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மார்ச் 31 ஆம் தேதி நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி 5 சத வீதம் முதல் 25 சதவீதம் வரை வரியை குறைத்து அரசாணை வெளிவந்தது. அர சாணை வந்து 20 நாட்கள் ஆன பின்பும் இன்  னும் அரசாணைப்படி வரி வசூல் நடைபெற வில்லை. இராஜபாளையம் நகராட்சி வரி  வசூல் மையத்தில்  உயர்த்தப்பட்ட அதிக மான வரியே வசூலித்து வருகின்றனர்.

2023-  24 ஆம் ஆண்டுக்கான வரி வசூலுக்கான டிமாண்ட் நோட்டீஸ் இன்னும் கணினியில் ஏற்றப்படவில்லை. தமிழக அரசோ 2023-  24-க்கான வரியை ஏப்ரல் 30 க்குள் செலுத்து வோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அளிப்  போம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் ராஜபாளையம் நகராட்சியில் இன்  னும் டிமாண்ட் நோட்டீஸ் வெளியாக வில்லை. இந்நிலையில் அரசாணைப்படி ஏன் வரி  வசூலிக்காமல் பழைய வரியை வசூல் செய்கி றீர்கள் என வரி வசூல் மையத்தில் பொதுமக்  கள் கேள்வி எழுப்பினர். . ராஜபாளையம் நக ராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு வைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மாரி யப்பன், ராமச்சந்திர ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் அதிகாரி களிடம் ஏன் அரசாணையை இன்னும் அம லாக்கவில்லை என கேட்டனர். அரசாணை யை அமல்படுத்துங்கள் அல்லது அரசாணை அமலாகும் வரை வரி வசூலை நிறுத்தி வையுங்கள் எனக் கூறியதற்கு நகராட்சி வருவாய் ஆய்வாளர் நகர்மன்றத்தை பூட்டி விட்டு சென்று விடலாமா என  பொதுமக்களிடம் ஆவேசமாக பேசினார். போராட்டக்குழுவினர் இன்னும் ஓரிரு நாளில் அரசாணைப்படி வரி வசூல் நடைபெற வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி  போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்த னர்.