தருமபுரி, அக். 26- தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் வலியுறுத்தி உள்ளது. சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்ற கூட்டத் திற்கு, மாநிலத் தலைவர் ஏ.புருஷோத்த மன் தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை, மாநில உதவித் தலைவர் வி. அழகு மலை ஏற்றிவைத்தார். மாநிலச் செயலாளர் ஆர்.சிவபெருமாள், அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தருமபுரி சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா வர வேற்றார். சிஐடியு மாநில உதவித் தலை வர் எம்.சந்திரன் துவக்கி வைத்துப் பேசி னார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாக ராசன் வாழ்த்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் மா. ஆத்மநாதன், வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பி.குணசேகரன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். இதில், குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளர் முதல் இளநிலை உதவியா ளர் வரை நேரடியாக நிரந்தரப் பணியில் நியமிக்கும் நடைமுறை உள்ள நிலை யில், வாரியத்தின் பிரதான பணியான குடி நீர் வழங்கும் பணியை மேற்கொள்ளும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பாரபட்சமான நியமன முறையை கைவிட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒரு தொழில் நிறுவனம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் சான்றளிக்கப்பட்ட நிலை ஆணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிலை ஆணை விதிகளுக்கு மாறாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பது சட்டவிரோதமாகும். வாரியத்தின் இந்த போக்கிற்கு எதிராக ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள், தொழி லாளர்கள் நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரை சென்று சாதகமான தீர்ப்பு களை பெற்றுள்ளனர். அவற்றை அமல் படுத்துவதற்கு மாறாக தேவையற்ற மேல்முறையீடுகளை காலம் தாழ்த்தும் போக்கை கைவிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்கு றுதிப்படி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநில செயலாளர்கள் ஆர்.சரவணன், எஸ்.சி.பிரகாசம், ஆர். அரவிந்த், எஸ்.பெலிக்ஸ், என்.பஞ்சாட்ச ரம், உதவித்தலைவர்கள் வி.முருகன், ஆர்.சோனைகருப்பையா, பி.பாலாஜி, ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந் தனர். முடிவில், மாநில செயலாளர் எம்.சங்கர் நன்றி கூறினார்.