tamilnadu

img

கூட்டுறவு சங்கங்களுக்கு புத்துயிர் ஊட்டி தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்

மதுரை, ஏப். 30-  கூட்டுறவு சங்கங்களுக்கு புத்துயிர் ஊட்டி  தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என  தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னத்தின் சார்பில் கூட்டுறவு சங்க ஊழி யர்களின் கோரிக்கை மாநாடு மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி தலைமை  வகித்தார். செயல் தலைவர் இரா.லெனின் வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார் துவக்கவுரையாற்றினார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், சிஐடியு மாநிலச் செயலாளர் இரா. தெய்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். சம்மேளனப் பொதுச் செயலாளர் என். ஆர்.ஆர்.ஜீவானந்தம் கோரிக்கை உரை ஆற்றினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை நிறைவு செய்து  பேசினார். டி.முத்து நன்றி கூறினார்

கோரிக்கைகள் 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் தீர்மானம் வருமாறு: அரசு அறிவிக்கும் குறைந்தபட்சம் போனஸ் கூட தர முடியாமல் பல்லாயிரக் கணக்கில் கூட்டுறவு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறைந்தபட்ச போனசை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.  பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பாக்கெட்டுகளில் பொருட் களை வழங்க வேண்டும். 100 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான சங்கங்கள் செய லற்று முடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மாற்றுப் பணியை அரசு வழங்க வேண்டும். மேலும் கூட்டுறவு இயக்கத்திற்கு வருமான வரியிலிருந்தும் இதர சேவை வரியிலிருந்தும் விலக்களிக்க வேண்டும்  பண்டகசாலை தவணைத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உரிய நேரத்தில் செலுத்துவதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் பணம் நிலுவை யில் உள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் பண்டக சாலைக்கு பணம் செலுத்த உத்தரவிட வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை மீது விதிக்கப்படும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். ஆவினில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் பிஎப், ஈஎஸ்ஐ போன்ற சமூக நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பணியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு விரைந்து கடன் வழங்க அனைத்து மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகளுக்கும் காசுக்கடன் வசதியை வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங் களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.