சென்னை,டிச.15- அணு சக்தித் துறையின் கல்பாக்கம் மையத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் மறுசுழற்சி ஆலை, முன்மாதிரி அதிவேக ஈனுலை (அணுமின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையப்பிரிவுகள் உள்ளன. இந்த மையம் அவசர கால தயார் நிலை செயல்முறை சோதனை திட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் “வளாகம் தாண்டிய அவசர நிலை” ஒத்திகையை நடத்தியது. இந்த ஒத்திகை 16 கிலோ மீட்டருக்குள் இருக்கும் அவசரகால திட்ட மண்டலத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. அணுமின் நிலையத்தில் கட்டமைப்பு மற்றும் இயங்கு நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதனை மாவட்ட நிர்வாகமும் அணுமின் கழக நிர்வாகங்களும் திறம்பட கையாளும் திறம் மற்றும் செயல் திட்டம் “உறுதியான பாதுகாப்பு” தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்து கொள்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும். இந்த ஒத்திகையானது கட்டளையிடு மற்றும் கட்டுப் ்படுத்து என்ற முறையில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறு மின்றி நடத்தப்பட்டது.
இதுபோன்ற ஒத்திகை இப்போது தான் முதன்முறையாக நடத்தப்பட்டது. மேலும் இதனைப் பற்றி மாவட்ட நிர்வாகனத்தினருக்கோ அல்லது பேரிடர் மேலாண்மை முகமையைச் சேர்ந்தவர்களுக்கோ முன்னறி விப்பின்றி எதிர்பாராத விதத்தில் அறிவிக்கப்பட்டு அவர்க ளின் உண்மையான தயார்நிலை பற்றியும் அவை மேலும் மேம்பாடு அடைவதற்காகவும் நடத்தப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு தேவையான முன் அறிவிப்பும் அறிவுரைகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஒத்திகை, சென்னை அணுமின் நிலையத்தில் பிரத்யேகமாக ஒரு சம்பவம் நடந்ததாக பாவிக்கப்பட்டு ஒரு குறுகிய கால அளவில் உருவாக்கப்பட்டது.