tamilnadu

img

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை!

சென்னை, ஜூன்11 தமிழ்நாடு மின்  வாரியத்தின் வரு வாய், நிர்ணயிக்கப் பட்ட அளவுக்கு இல் லாமல், தொடர்ந்து இழப்புகள் அதி கரித்து வருவதால் ஜூலை 1 முதல் மீண்டும் மின்கட்டண உயர்வு அமலாக வாய்ப்பு உள்ளது” என சமூக ஊடகங் களில் தகவல் பரப்பப்பட்டது. இந்நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற் போது மின் கட்டண உயர்வு செய்யப்பட வில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளது.