கெய்ரோ, அக்.28- எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த மாநாட்டில் பேசிய போது அந்நாட்டு ஜனாதி பதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிஸ்ஸி காசாவில் இரண்டு நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ஹமாஸ் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வரும் மத்யஸ்தம் செய்யும் குழுவில் உள்ள நாடு எகிப்து. எகிப்து விடுத்துள்ள அழைப்பில் ஹமாஸ் தரப்பில் இருந்து 4 பணயக்கைதிகளையும் இஸ்ரேல் தரப்பில் இருந்து சிறையில் உள்ள பாலஸ்தீனர்க ளையும் விடுவிக்கவும் ஆலோசனை முன் வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு மேலும் சமரசப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கலாம் என்று கூறி யுள்ளார். ஆனால் இது குறித்து ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த அறிவிப்புகளும் வரவில்லை. காசாவைத் தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது முழுஅளவி லான போர்த் தொடுக்கத் துவங்கியுள்ளது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 2500 க்கும் அதிகமான லெபனான் மக்களும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் படுகொலையாகியுள்ளனர். பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. லெபனானின் மருத்துவக் கட்டமைப்புகளை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறது. லெபனானுக்குள் இஸ்ரேல் நடத்தி வரும் முழு அளவிலான போரில் இஸ்ரேல் ராணுவ மும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இது வரை 30 க்கும் அதிகமான இஸ்ரேல் வீரர்கள் ஹிஸ்புல்லா தாக்குதலில் பலியாகியுள்ளனர். அவர்களது மெர்காவி என்ற நவீன ரக பீரங்கி களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதே சூழலில் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சிறிதளவு கூட குறைய வில்லை. ஒவ்வொரு நாளும் அப்பாவி பாலஸ் தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்து வரு கிறது. ஞாயிற்றுக்கிழமை கூட 50 க்கும் அதிக மான பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது. மேலும் ஐநா நிவாரண வாகனங்களை தடுத்து வைத்து பாலஸ்தீனர்களை கடுமை யான பஞ்சத்தில் தள்ளியுள்ளது. கடந்த 3 வார மாக ஐநா நிவாரண வாகனங்களை காசா விற்குள் அனுமதிக்காமல் திங்களன்று சில வாகனங்களை மட்டும் அனுமதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். மேலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் ராணு வம் எந்தக் கட்டுப்பாடும் இன்றி லெபனான், காசா, சிரியா, ஈரான் என தாக்குதலை விரிவு படுத்தி போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ள சூழலில் எகிப்தின் 2 நாள் போர் நிறுத்த அழைப்பு முக்கிய அழைப்பாகக் கருதப்படு கிறது.