tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்  (உபா) கீழ் நியூஸ் கிளிக் ஆசிரியர்  பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கடுமையாக  கண்டிக் கிறேன். பீமா கோரேகான் வழக்கில் உபா  சட்டத்தின்  கீழ் 4 ஆண்டுகளாக எவ்வித குற்றச்சாட்டும் முன் வைக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கிறார்கள். அதேபோல், பிரபீர் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. தலைநகரிலும், மும்பையிலும் 100 இடங்களில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் தொடர்பாக தில்லி  போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். தில்லி காவல்துறை முற்றிலும் அவதூறான, திட்டமிட்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.  நபர்களைக் குறிவைத்து கைது செய்திருக்கிறார்கள். அதிகாரத்தின் அட்டூழியங்களுக்கு எதிரான ஊடகங்களின் குரலை வலுப்படுத்த அழைப்பு விடுக்கிறேன்.