tamilnadu

மதுரையில் மருந்துகடைகள் இன்று பகுதி நேரம் அடைப்பு

மதுரை, ஜூன் 25- சாத்தான்குளத்தில் செல்போன் வியா பாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கிளைச் சிறையிலிருந்தபோது உடல்நல ககுறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். காவல் துறை தாக்குதலால் இருவரும் உயிரிழந்த தாகக் கூறி உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலை யில் இருவரது உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை தாக்குதலால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வித மாகவும், காவல்துறையினர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரை நகரில் உள்ள 1,500 மருந்துகடைகள், புற நகரில் உள்ள 300 மருந்துக்கடைகள் வெள் ளிக்கிழமை காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை அடைக்கப்படுமென மதுரை மாவட்ட மருந்துக்கடை உரிமையாளர் சங்க ஸ்தாபக செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.