சென்னை,பிப்.16- ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப் ப்படுத்தும் நடவடிக்கையை கைவிடு வதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்த சட்டபூர்வ வாரிசுகான தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கைய கப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பளித் திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம்நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி கள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தனி நீதிபதி உத்தர வில் தவறில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டு அதிமுக வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில சென்னை ஆறுவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரி விக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதி மன்றம், வருமானவரித் துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கில் வரும் 18 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ள தாக குறிப்பிட்டுள்ளது.