tamilnadu

img

வலதுசாரி சக்திகளை எதிர்க்க திமுக-இடதுசாரி ஒற்றுமை அவசியம்

வலதுசாரி சக்திகளை எதிர்க்க திமுக-இடதுசாரி ஒற்றுமை அவசியம்

சென்னை கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் பேச்சு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது.  இதனையொட்டி, தோழர் பி.ராம மூர்த்தியின் சட்டமன்ற நாடாளு மன்ற உரைகள்  நூலை முன் வைத்து, ‘நாடாளுமன்ற ஜனநாய கமும் கம்யூனிஸ்ட்டுகளும்’ எனும் தலைப்பில் வியாழனன்று (மார்ச் 6) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர்கள் இடைக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை வகித்தார்.

 நாடாளுமன்றமும் ஜனநாயகமும் கேள்விக்குறி

 இக்கருத்தரங்கில் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், “தோழர் பி.ஆர். இரண்டு முறை மாநிலங்களவை, ஒரு முறை மக்க ளவை உறுப்பினராக இருந்து பணி யாற்றினார். இன்றைக்கு நாடாளு மன்றமும், ஜனநாயகமும் கேள்விக் குறியாக மாறிவருகிறது. மக்க ளவை கூட்டம் சராசரியாக 135 நாட்கள் நடந்த நிலை மாறி தற் போது 55 நாட்கள்தான் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் அமளி செய்வதாக ஆளும் கட்சி சுமத்தும் பழி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.  “கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத போது எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்யும்; அமளியில் ஈடுபடும். ஆளும் கட்சி அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளிக்க வேண்டும். அரசாங்கத்தை நடத்த வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்குத்தான் உள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.  

ஒற்றுமை அவசியம்

“மதவாத, வலதுசாரி சக்திகளை தடுக்க இடதுசாரிகள், திமுக இளை ஞர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். திமுக அணிகள் பல நிலைகளில் ஒன்றிய அரசை எதிர்த்து போராடுகின்றன. திமுக, இடதுசாரி ஒற்றுமையை வலுப் படுத்தி இந்த போராட்டத்தை முன் னெடுக்க வேண்டும். நாடாளுமன்ற த்திற்குள்ளேயும் போராட வேண்  டும். சிபிஎம் போராடுகிற அளவுக்கு திமுகவும் போராட வேண்டும்,” என்றார்.  

நீதித்துறையில் வலதுசாரி போக்கு அதிகரிப்பு  

“நீதித்துறையில் வலதுசாரி போக்கு அதிகரித்துள்ளது. நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் சிறப் பாக வாதாடினாலும், நீதிபதியின் சிந்தனையிலிருந்துதான் தீர்ப்பு வருகிறது. அவை சமுதாயத்திற்கு பொருத்தமானதாக இல்லை. ஆளும் வர்க்க கருத்துக்களை, மத வாத, சாதியவாதத்தை பிரதிபலிப்ப தாக உள்ளது. பி.ராமமூர்த்தியின் கருத்துக்களையும் செயல்பாடு களையும் முழுவதுமாக உள்வாங்கி கம்யூனிஸ்டுகளும், வழக்கறிஞர் களும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று ரங்கராஜன் வலி யுறுத்தினார்.  

மொழிவாரி மாநிலங்கள் கூட்டாட்சியின் அடித்தளம்

பி.ஆரின் புதல்வியும் சென்னை  உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரு மான ஆர்.வைகை பேசுகையில், “1950ல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்து விட்டது. நாடாளுமன்றமும் செயல்படத் தொடங்கியபோது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்கவேண்டுமா வேண்டாமா என பெரியளவில் விவாதம் நடை பெற்றபோது பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில் ஜனநாயக பூர்வமாக ஏற்படுத்தப் பட்ட அனைத்து அரசு அமைப்பு களையும் பயன்படுத்திக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது” என்றார்.   “மாநிலங்கள் மாற்றி யமைக்கப்பட்டபோது மொழிவாரி யாக மாநிலங்கள் உருவாக்கப் படவேண்டும் என்பதில் கம்யூ னிஸ்டுகள் உறுதியாக இருந்த னர். இதற்காக அவர்கள் நாடாளு மன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பினர். ஒரு குறிப்பிட்ட பிராந்தி யத்தில் அதிகமாக பேசக்கூடிய மொழியின் அடிப்படையில் மாநிலம் உருவாக்கப்படாவிட்டால் ஜன நாயகத்தை திறமையாக அமல் படுத்தமுடியாது என்று வாதிட்டனர். மொழிவாரி மாநிலங்கள் தான் இன்று கூட்டாட்சி அமைப்பின் அடித்தளமாக விளங்குகிறது,” என்று அவர் கூறினார்.  

பி.ஆர் வலியுறுத்தியதால் குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டம்  

“1952ல் தோழர் பிஆர் சிறையில்  இருந்தவாறு மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மத ராஸ் மாகாண சட்டமன்றத் தேர்த லில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் கணிசமாக வெற்றி பெற்றிருந்தனர். தோழர் பிஆர், கம்யூனிஸ்டுகளையும் சேர்த்து ஐக்கிய ஜனநாயக அணியை ஏற் படுத்தினார். அதுபோன்ற அணி இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம்” என்று வைகை சுட்டிக் காட்டினார்.  “சட்டப்பேரவையில் தோழர் பிஆர் வலியுறுத்தியதன் காரண மாக தஞ்சாவூரில் குத்தகை சாகு படியாளர்கள் நிலப் பாதுகாப்புச் சட்டம் உருவானது. 1969ல் கொண்டு வரப்பட்ட மன்னர் மானியம் ஒழிப்பு மற்றும் வங்கிகள் நாட்டுடைமை என இரண்டு முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டதில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்” என்றும் அவர் கூறினார்.  

கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு இருட்டடிப்பு  

முன்னதாக ஜி.செல்வா கருத்த ரங்கின் நோக்கம் குறித்து பேசுகை யில், “தாய்மொழி அவசியம், இந்தி மொழி திணிப்பு குறித்து தற்கா லச்சூழலில் விவாதிக்கப்படுகிறது. 1967ல் அலுவல் மொழிகள் திருத்த மசோதா விவாதத்தில் பி.ராம மூர்த்தி பேசுகையில், மாநில அரசு,  சாதாரண குடிமக்கள் மத்திய  அரசுக்கு தமிழில் கடிதம் எழுதி தமிழில் பதில் பெறவேண்டும். அதற் கான உரிமையை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதை சுட்டிக் காட்டினார்.  “மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்த வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை ஆட்சியாளர்களின் போக்கு சீர்குலைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த உரை இன்றைக்கும் பொருந்துகிறது. மொழி உரிமை, மாநில உரிமைக் கான கம்யூனிஸ்ட்டுகளின் பங்க ளிப்பு இருட்டடிப்பு செய்யப்படு கிறது” என்றும் அவர் கூறினார்.