tamilnadu

img

புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக-காங்.எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக-காங்.எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

பெஞ்சால் புயலில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின்  6-வது கூட்டத்தொடர், துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புதன்கிழமை (மார்ச் 12) காலை 9.30 மணிக்கு ரூ.13,600 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், துணை நிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின் மீது இரண்டா வது நாளாக செவ்வாய்க் கிழமை (மார்ச் 11) விவாதம் நடைபெற்றது. இந்த விவா தத்தில், சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர் அங்கா ளன் பேசுகையில், பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட வீடு களில் வாழ்ந்தவர்களுக்கு எந்தவிதமான நிவாரணம் வழங்கவில்லை. பலியான கால்நடைகளுக்கும் நிவா ரணம் தரவில்லை என்றார். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராய ணன், வீடு இழந்தவர்களின் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக் கிறது. விரைவில் நிவா ரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி யளித்திருக்கிறார் என்றார்.  அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலை வர் சிவா,” மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தேடிச் சென்று உதவுதல் அவசி யம். பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடை இழப்புக்கு  கூட இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. பாதிக்கப் பட்ட மக்களும் உதவி கிடைக்கவில்லை என்றார். பாகூர் தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், எங்கள் தொகுதியில் மக்கள் அதிகம் பாதித்துள்ளனர். ஆனால், இதுவரைக்கும் நிவாரணம் தரவில்லை.  இதற்கு முன்பு, புயல்-மழை வெள்ளத்தில் பாதித்த வீடுகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் சரமாரியாக குற்றச் சாட்டுகளை சுமத்தினார். உறுப்பினர்கள் குற்றச்  சாட்டுகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் தர வில்லை. இதையடுத்து, திமுக மற்றும் காங்கி ரஸ் சட்டமன்ற உறுப்பினர்  கள், “அரசு தவறான தகவல்  களை சட்டமன்றத்தில் வழங்குகிறது” எனக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தனர்.