tamilnadu

img

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் திமுக கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு

தூத்துக்குடி, மே 12-ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிமாப்பிள்ளையூரணி ஊராட்சி இந்திராநகரில் திமுக மேற்கு மாவட்டக் கழகச்செயலாளர் பத்மநாதன் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும்பணி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், திமுக நெல்லைமேற்கு மாவட்ட துணைச் செயலாளர்பேபி ரஜப் பாத்திமா, பாகப் பொறுப்பாளர், நெல்லை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, துணை அமைப்பாளர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சங்கரன், வார்டு கழகச் செயலாளர் பொன்னுச்சாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் டி.வி.டி.டி.ராஜேந்திரன் சுரேஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பூங்கொடி, முத்துலதா, கிருஷ்ண லீலா, வேலம்மாள், அண்ணாமலை மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்கள் கலைஞர் ஆட்சியில் 2006ல்வழங்கப்பட்ட பட்டாவிற்கு பின்னர் புதிதாக யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் முதியோர் உதவித் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் சாலை வசதி, குடிநீர் வசதி மிகவும்மோசமாக இருக்கிறது என்றும் கூறினார்கள். அதனை கேட்டுக் கொண்ட தலைவர்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்த தொகுதியில் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிற போது,இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற சண்முகையா வெற்றி பெற்று வருகிற போது, உங்கள்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர்.