திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- திருச்சி மாவட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக் கமிட்டி குழுக்கள், கிளைகள், தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் தீக்கதிர் சந்தா சேர்க்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றன. திங்களன்று வெண்மணி இல்லத் தில் தீக்கதிர் சந்தா வழங்கும் சிறப்பு பேரவை திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா தலைமை வகித்தார். முதற் கட்டமாக சேகரிக்கப்பட்ட 84 ஓராண்டு சந்தா, 256 ஆறு மாத சந்தா என மொத்தம் 340 சந்தாவுக்கான தொகை 4 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதியிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச் செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபால் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதுபெரும் தோழர் சங்கரய்யாவின் 103 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன் நன்றி கூறினார்.