tamilnadu

img

சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்து பானை ஓடுகள் கண்டெடுப்பு

சென்னை,ஜூலை 21- கிருஷ்ணகிரி மாவட் டம் சென்னானூர் அகழாய்வு தளத்தில் புதிய கற்காலப் பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலை யில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழு முனைக் கிடைக்கப்பெற் றது. இக்கொழுமுனை 1.3 கிலோ எடையும் 32 செ.மீ நீளமும்  3 செ.மீ தடிமனும் கொண்டிருந்தது. மேலும்,  சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச் சில்லுகள், தக்களி ஆகிய சங்க காலம் என்றழைக்கப் படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. தற்போது, சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108  செ.மீ  வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்  பொறிக்கப்பட்ட மூன்று  பானை ஓடுகள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே [ந்]தை பாகஅந், ஊகூர், [சா]த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப் பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம்,  நெல் வெளிஇய், இலஞ்சி, கரு ஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் பானை ஓடுகளில் பெரும்பா லும் ஆட்பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உறையூர் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக் கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாக கருதப்படு கிறது என்று தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது “எக்ஸ்”  வலைதளத்தில் பதிவிட்டுள் ளார். சரியான திசையில் பயணிக்கிறோம் : மு.க.ஸ்டாலின் இதுபற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது “எக்ஸ்”  சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மூடியுடன் பானை, பாசி மணிகள், சுடுமண் கிண்ணங் கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை  ஓடு, இரும்பிலான ஏர்க் கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடர்ந்து அக ழாய்வுகளில் கண்டுபிடிக்கப் படும் பொருட்கள், தமிழ ரின் வரலாற்றையும் பண்பா ட்டையும் அறிவியல் சான்று களுடன் உலகுக்கு எடுத்துக் கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதி செய் கிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாறு தெற்கிலி ருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்! இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.