tamilnadu

img

பெருங்களூர் அருகே விசிறிப் பாறை கல் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, நவ.25-  புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே விசிறி பாறை கல்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கல்வெட்டு ஆய்வா ளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநகரச் செயலாளருமான  எஸ்.பாண்டியன் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பெருங்கற்கால சின்னங்கள் அதிக அளவில் காணப்படக்கூடிய மாவட்ட மாக புதுக்கோட்டை விளங்குகிறது. பொதுவாக பெருங்கற்கால சின்னங் களை நெடுங்கல் அல்லது குத்துக்கல்,  தொப்பிக்கல், விசிறி பலகை போன்று பல வகைகளாகப் பிரிக்கலாம். இதுவரை புதுக்கோட்டையில் குத்துக்கல் அல்லது நெடுங்கல், தொப்பிக்கல் கல்வட்டங்கள் கற்திட்டை கள் போன்றவைகள் காணப்படு கின்றன. குறிப்பாக சித்தன்னவாசல், குடுமையான்மலை, தாயினிப்பட்டி, கலசமங்கலம் ஆகிய இடங்களை குறிப்பிடலாம். இந்த பெருங்கற்கால சின்ன வகைகளில் விசிறி பலகை என்ற  ஒன்று ஒரு வகையான அரிய வகை  சின்ன அடையாளமாக பார்க்கப்படு கிறது. விசிறி பலகை கற்கள் தமிழ்நாட்டில்  இரண்டு இடங்களில் மட்டுமே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விசிறி பலகைகள் என்பது பெரும் கற்களை கொண்டு முழுமையாக சின்னங்கள் அமைத்த பெருங்கற்கால மக்கள் பின்னாளில் கற்களை வடிவ மாக்கி பயன்படுத்தினார்கள். இது சிற்பக் கலைகளின் தொடக்க கால  கல் அமைப்பு என்று கூட குறிப்பிடலாம். ஏனெனில் அதுவரை குத்துக்கல் அல்லது நெடுங்கல் என்று  சொல்லக்கூடிய அந்த வகை நினைவுச்  சின்னமானது இறந்தவர் நினைவாக ஒரு நீண்ட நெடிய பலகைக் கல்லை அந்த இடத்தில் நட்டு வைப்பார்கள். விசிறி பலகை என்பது ஒரு மனிதரு டைய உருவத்தை ஒத்து வடிவத்தில் தலை கை கால் என்ற உடல் உறுப்பு களோடு ஒப்பிடலாம். தென்னிந்தி யாவை பொறுத்தவரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இந்த விசிறி பலகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் தமிழகத்தில் மிகவும் சொற்ப அளவிலான விசிறி பலகைகளே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இன்றளவும் முன்னோர்களின் நினைவாக இந்த விசிறி பலகை களை மக்கள் வழிபடுவதை தமிழ கத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. தமி ழகத்தில் இதுவரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மோட்டூ ரில் ஒன்றும், விழுப்புரம்  மாவட்டத்தில் உள்ள உடையார் நத்தம் என்ற கிரா மத்தில் இன்னொன்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தற்போது மூன்றாவது புதுக்கோட்டை மாவட்டம் பெருங்க லூர் அருகே உள்ள வெள்ளவெட்டான் விடுதிக்கும் மட்டையன்பட்டிக்கும் இடையே உள்ள வீரன் காளி பொட்டல் எனும் இடத்தில் கிடைத்து உள்ளது. இங்கு விசிறி பாறை கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இது 5 ஏக்கர்  பரப்பளவு கொண்ட பகுதியில் பெருங் கற்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இடமாக விளங்கி இருந்துள்ளது. இதில் நீண்ட நெடிய குத்துக்கற்களும், கற்குவியல்களும், மட்தாழிகளும் காணப்படுகிறது.  இவை அனைத்தும் குளம் தூர் வாரியபோது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டதாகவும் குத்து கற்கள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. இதில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட விசிறி பாறை கல்லானது சாய்ந்த நிலையில் காணப்பட்டது.  மேலும், ஒரு விசிறியின் இடது புறம்  கை அமைப்பு உடைந்த நிலையில் 180 செ.மீ உயரம் 86 செ.மீ அகலம் 11  செ.மீ கணம் கொண்டதாக காணப்படு கிறது. இதனை புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்தனர். இதனை புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு  நடுவம் மற்றும் டெல்டா எக்ஸ்பு ளோரர்ஸ் இணைந்து அந்த இடத்தில் மறுசீரமைப்பு செய்து பாதுகாப்பாக நட்டு வைத்தனர். இந்தக்குழு கிடைக்கும் வர லாற்று தரவுகள் கல்வெட்டுகள், கோவில் கல்வெட்டுகள், சிற்பங்கள்,  பெருங்கற்கால நினைவுச்சின்னங் களை கண்டறிவது மட்டுமின்றி அதே  இடத்தில் மறுசீரமைப்பு செய்து வைக்கும் நோக்கத்தோடும் பாது காப்பின்றி உள்ள வரலாற்று பொக்கி ஷங்களையும் கண்டறிந்து அருங்காட்சி யங்களுக்கும் உரிய அலுவலகங்களுக் கும் ஒப்படைப்பது போன்ற செயல் பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் ஒத்துழைப்போடும், பொது மக்கள் ஒத்துழைப்போடும் மேற்படி கல் எடுத்து வைக்கப்பட்டது.  புதுகை தொல்லியல் மற்றும் வர லாற்று நடுவம் தலைவர் புதுகை பாண்டியன், செயலாளர் இந்திரஜித், உறுப்பினர்கள் இராஜகோபால், முனு சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் உடன்  இருந்து உதவி செய்தனர்.