சென்னை, ஜூன் 10 - அனலாக் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் 21ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு மாநாடு அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்றது. ஆபரேட்டர் களுக்கு கடந்த அதிமுக அரசு முறையாக கேபிள் ஒளிபரப்பை தரவில்லை. இதுபோன்ற காரணங்களால் அனலாக் தொகையை முழு மையாக செலுத்த இயல வில்லை. எனவே, நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று தள வாடகையையும் ரத்து செய்ய வேண்டும். மின்கம்பங்களில் கேபிள் களை கட்ட அனுமதி மறுப்பது, சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மின்வாரிய அதிகாரிகள் கைவிட வேண்டும், 18 விழுக் காடு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஆர்.தணிகை வேல் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் குறிஞ்சி என்.சிவக் குமார், சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், சங்கத்தின் நிறுவனத் தலை வர் பி.சகிலன், பொதுச் செய லாளர் எம்.வீரமுத்து, பொரு ளாளர் எஸ்.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் தலைவராக எம்.வீரமுத்து, பொதுச் செய லாளராக எஸ்.வெள்ளைச் சாமி, பொருளாளராக ஆர்.கோவர்தனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.