சென்னை,ஜன.16- தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இத னால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு கள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் மீண்டும் வகுப்புகள் தொடங்கி நடை பெற்று வருகின்றன. அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் வாயிலாகவே வகுப்பு கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களை தவிர, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு நடைபெற இருப்பதன் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31 ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு களுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.