சென்னை, நவ. 16 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 21-ஆவது உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கத்தின் தொடர் கல்வித் திட்டம் மற்றும் அந்தி யாவின் சிறு விலங்கு பயிற்சி யாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பின் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதியின் சாதனைகளை அனைவரும் பாராட்டினார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய திறமையின் மூலம், விளையாட்டுத் துறை இட ஒதுக்கீட்டில் கால்நடை அறிவியல் படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். துளசி மதி விளையாட்டுத்துறை, கால்நடை மருத்துவத் துறை என இரண்டிலும் இன்னும் பல உயரங்களைத் தொட நம்முடைய அரசும், தமிழக முதல்வரும் என்றும் அவருக்கு துணை நிற்பார்கள். அவரது சாதனைகள் தொடரட்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.