tamilnadu

img

டெங்குவை கட்டுப்படுத்த அக். 1-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அக்டோபர் 1-ஆம் தேதியன்று சிறப்பு மருத்துவ முகாம் நடக்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை காரணமாக சில இடங்களில் நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருகின்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அக்டோபர் 1-ஆம் தேதியன்று சிறப்பு மருத்துவ முகாம் நடக்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

;