மதுரை, மே 9- மதுரையில் மதசார்பற்ற முற்போ க்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமி ழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டிய பொ ருட்களை முறையாகவும் மக்கள் பயன்ப டுத்தும் வகையிலும் வழங்கிட வேண்டு மென்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மக பூப் பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா. விஜய ராஜன் தலைமை வகித்தார் . திமுக மாவட்ட செயலாளர் கோ. தளபதி, மதி முக மாவட்ட செயலாளர் மு. பூமிநா தன், எஸ். மகபூப்ஜான், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், சிபிஐ மாவட்ட செயலாளர் எம். சரவ ணன், விசிக மாவட்ட செயலாளர் ப. கதி ரவன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி னார்கள்.
மதுரை அரசரடி பகுதி குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்ட ணிக் கட்சிகள் கலந்து கொண்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. லெனின் பகுதி குழு செயலாளர் கு. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய பகுதி குழு சார்பில்பல்வேறு இடங்களில் கோ ரிக்கை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிகுழு செயலாளர் பி.ஜீவா மற்றும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பழங்காநத்தம் பகுதிகுழு சார்பில் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பு 50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை திறக்க விடாமல் போராட்டம் நடத்தி னார்கள். இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா. கணேசன் , பகுதி குழு செயலாளர் கா, இளங்கோ வன் உள்ளிட்டு திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜெய்ஹிந்துபுரம் பகுதி குழு சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். செல்லூர் பகுதி குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிகுழு செய லாளர் ஜா. நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மீனாம்பாள்பு ரம் பகுதி குழு சார்பில் பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ம. பாலசுப்பிரமணியம், ஆர்.சசிகலா, பகுதி குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்ட குழு உறுப்பினர் கே. அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதூர் -அண்ணா நகர் பகுதி குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், பகுதிகுழுச் செயலாளர் டி. குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெற்கு வாசல் பகுதி குழு சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பகுதிகுழு நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், பகுதி குழு செயலாளர் யூ.எஸ். அபுதாகிர் மாவட்ட குழு உறுப்பினர் மா. செல்லம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலப்பொன்னகரம் பகு திகுழு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கூட்டணி கட்சிகள் சார்பில் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகுதிகுழுச் செயலாளர் வை.ஸ்டாலின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். தெய்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முனிச்சாலை பகுதிகுழு சார்பில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகு திகுழு செயலாளர் ஜெ. லெனின் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பலர் வீடுகளில் இருந்தவாறே கோரிக்கை பதாகை களை ஏந்தி முழக்கங்களை எழுப்பினார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்லூர் மற்றும் மேலப்பொ ன்னகரம் பகுதிகுழுக்கள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி. செல்வராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகி கள் பாவேல் சிந்தன், நவீன், சரண் மாவ ட்டகுழு உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.