ஏப்.25 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஏப்.25 ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரம் நடத்துவது என வருவாய்த் துறை அலுவலர் சங்கம் அறிவித் துள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம், ஈரோடு சோலார் கோல்டன் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.பி.முருகையன் தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் விஜய் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சு.சங்கரலிங்கம் கடந்த கால நடவடிக்கைகளை எடுத்து ரைத்தார். இக்கூட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் நிலுவைக் கோரிக் கைகளை நிறைவேற்ற, புதிதாக பொறுப் பேற்றுள்ள வருவாய் நிர்வாக ஆணை யர் கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில், ஒரு மாதம் அவகாசம் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.
வருவாய்த்துறை அலுவலர் களுக்கு சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்துதல், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரு வாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப் பின் (FERA) சார்பில் 2025 ஏப்.7 ஆம் தேதி பிரச்சாரம் நடத்துவது எனவும், ஏப்.25 ஆம் தேதி மாவட்ட, வட்டக் கிளைகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்து வது எனவும் முடிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு 2025-26 ஆம் ஆண்டுக்கான 18 மாநில நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்ற னர். மாநிலச் செயலாளராக லி.அனந்த கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்) தேர்வு செய்யப்பட்டார். மாநிலப் பொருளாளர் வெ.சோம சுந்தரம் நன்றி கூறினார்.