தூத்துக்குடி, ஏப். 25- ஒன்றிய பாஜக அரசு துறை முகங்களில் தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், துறைமுக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பென்ஷன் போனசை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை துறைமுக ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்கள் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை அடுத்து தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுக ஆணைய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பால கிருஷ்ணன், சுதீந்திர குமார், கே. காசி, மீனாட்சி சுந்தரேசன்,போர்ட் மெரைன்ஸ் அன்ட் சென்ரல் ஸ்டாப் யூனியன் (ஹெச்எம்எஸ்) சார்பில் சத்ய நாராயணன், ஆரோக்யராஜ், போர்ட் யுனைடட் ஒர்க்கர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் HMS (w),ஜான் கென்னடி, கிளிண்டன், ஜீடு, நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் ஐஎன்டி யுசி ராஜ ேகாபாலன், சந்திரசேகர், ஸ்டீபன், போர்ட் எம் ப்ளாயீஸ் டிரேட் யூனியன் ஐஎன்டியுசி விஜய், செல்லையா, ஓ.கனகராஜ், பரமசிவன், வ.உ.சி. போர்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் ஏஐடியுசி சார்பில் பால சிங்கம், ராஜ்குமார், போர்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஐஎன்டியுசி சார்பில் செல்வகுமார், பிரவீன் குமார், போர்ட் அண்ணா டாக் சங்கம் சண்முககுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரி வித்தனர்.