ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்
சென்னை, ஜூலை 17 - மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென ஒன்றிய பாஜக அரசு கட்டாயப்படுத்துவதைக் கண்டி த்தும், உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை தமிழக அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் ஜூலை 25 அன்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பா ட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. புதனன்று கூடிய கட்சி யின் மாநிலக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டெண் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதைக் கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமை யாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்த லின் போது கொடுத்த வாக்குறுதி யின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடை முறைப்படுத்திடக் கோரியும், தமிழ் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்திசெய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட கோரி யும், அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலை யை குறைத்திட வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தனியார்மயமாக்க லுக்கு இரையாகாமல் அனை வருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25.07.2024 அன்று தமிழ்நாடு முழு வதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. மக்கள் நலனை முன்வைத்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத் தில் பெருந்திரளாக அனைத்து தரப்பு பொதுமக்களும், வணிகர்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழு வேண்டுகோள் விடுக்கிறது
நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5-ஆம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை யில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்ற வாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர தேவை யான சட்டரீதியான அனைத்து நட வடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரையும் தனது பொறுப்பில் எடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் திருவேங்கடம் என்பவர் தப்பி ஓடியதாகவும், புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை சுட முயற்சி செய்த போது திரு வேங்கடத்தை காவலர்கள் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு என்கவுண்ட்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்க மானதாக இருக்கிறது. சமீபத்தில் புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமி என்ற குற்றவாளி என் கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வன்மை யான கண்டனத்திற்குரியது. மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் இப்படி அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகும். குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என்கவுண்ட்டர்கள் தீர்வல்ல. புலன் விசாரணையை பலப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிப்பதும், சட்டத்தின் வழி முறையில் நின்று குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் வரை யறை ஆகும். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்துள்ள இதுதொடர் பான வழிகாட்டுதல்களை காவல் துறையினர் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.