திருவனந்தபுரம்/திருச்சூர் 2021 சட்டப்பேரவைத் தேர் தலின்போது திருச்சூர் பாஜக அலுவலகத்திற்கு கோடிக் கணக்கில் கருப்புப் பணம் கொண்டு வரப்பட்டதாக அக்கட்சியின் முன் னாள் அலுவலக செயலாளர் திரூர் சதீஷ் பரபரப்பு வெளிப்படுத்தல் செய் துள்ளார். இதுகுறித்து திரூர் சதீஷ் கூறுகை யில், “பணம் 6 சாக்கு மூட்டைகளில் கொண்டுவரப்பட்டது. திருச்சூர் மாவட்டத்துக்கான தொகையை அலு வலகத்தில் இறக்கிவிட்டு, மீதி பணத் துடன் ஆலப்புழா செல்லும் வழியில் கொட்டாக்கராவில் மூன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் அங்கு வந்த போது காவல் காத்தவன் நான். பணத்துடன் தர்மராஜ் வந்தபோது பாஜக தலைவர்கள் கே.சுரேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் அலுவல கத்தில் தான் இருந்தனர். பணம் கையாண்டதற்கான சான்றுகள் என் கையில் உள்ளன” என கூறினார். இந்த வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, சதீஷ் அலுவலக செய லாளர் பதவியில் இருந்து நீக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், “இதுவரை கட்சியில் இருந்து என்னை யாரும் நீக்க வில்லை. யாராலும் எனக்கு விலை பேச முடியாது,” என்று சதீஷ் தெரி வித்துள்ளார். விரிவான விசாரணை நடத்த வேண்டும் : சிபிஎம் இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி.கோவிந்தன் கருத்து தெரிவிக்கையில், “பாஜக தலைமைக்கு தெரிந்தே பல கோடி ரூபாய் கருப்புப் பணம் வந்தது. கொட்டாரக்கரா வழக்கு கருப்புப் பண விநியோகத்தில் ஒரு சிறு பகுதிதான். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாஜக என்ன செய்தாலும் அதை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் அமலாக்கத்துறையின் நிலைப் பாடு. பாஜக எதை விரும்புகிறதோ அதுதான் அமலாக்கத்துறையின் நிலைப்பாடாக உள்ளது” என்றும் கோவிந்தன் குற்றம்சாட்டினார்.