tamilnadu

img

மூணாறில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு

மூணாறு,ஏப்.18- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத் தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட மாக கட்சியின் மூணாறு, மறையூர் ஏரியா கமிட்டிகள் சேகரித்த சந்தா தொகை மற்றும் சந்தாதாரர்களின் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி ஞாயி றன்று மூணாறு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் சி.வி.வர்கீஸ், சந்தா தொகை மற்றும் சந்தாதாரர் பட்டி யலை தீக்கதிர் பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோகனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் இடுக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.சசி, மூணாறு ஏரியா கமிட்டி செயலாளர் கே.கே.விஜயன், மறையூர் ஏரியா கமிட்டி செயலாளர் வி.ஸிஜிமோன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.லட்சுமணன், ஆர்.ஈஸ்வரன், சுசீலா ஆனந்த், தீக்கதிர் விளம்பரப் பொ றுப்பாளர் எம்.சங்கரநயினார், தேனி மாவட்ட நிருபர் எஸ்.முத்து ஆகியோர் பங்கேற்றனர்.