சென்னை, மார்ச் 20 - விடைத்தாளை காலதாமதமாக பதிவேற்றிய 10 ஆயிரம் விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பருவத் (செமஸ்டர்) தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்த இயலவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய பிப்ரவரி மாதம் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. இதன்படி, பல்கலைக் கழகம் கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது. கூகுள் கிளாஸ் ரூப் ஆப் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு கல்லூரிகள் வினாத்தாளை வெளியிட்டது.
அதை பார்த்து மாணவர்கள் வீட்டில் இருந்த படியே தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து தேர்வு நேரம் முடிந்த 30 நிமிடங்களுக்குள் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். அதன் பின்னர், வினாத்தாள்களை அதே நாள் மாலை 5 மணிக்குள் தூதஞ்சல் (கொரியர்) மூலம் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும். விடைத்தாள்களை சேக ரித்து அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கல்லூரிகள் அனுப்பி வைத்தன. அந்த வினாத்தாள்கள் குறிப்பிட்ட காலகெடு வுக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? அனுப்பி வைக்கப் பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டன. இதன்படி ஆய்வு செய்ததில், சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விடைத்தாள் களை பதிவேற்றம் செய்யாதது கண்டுபிடிக்கப்படடது.
அத்தகைய விடைத்தாள்களை மதிப்பிடுவதை பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத மாணவர்களை ஆப்சென்டாக கணக்கிட்டு, அவர்கள் அனைவரும் தேர்தலில் தோல்வி அடை யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தல் வேல்ராஜ் கூறுகையில், “பிப்ரவரி 1 முதல் 12ந் தேதி வரை ஆன்லைன் தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் ஆப்சென்ட் ஆக்கப்பட்டுள் ளனர். இதுபற்றி ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். அமைச்சர் மறுப்பு இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “அண்ணா பல்கலைக் கழகத் தேர்வில் காலதாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப் படும். ஆன்லைன் தேர்வுகளால் கல்வியின் தரம் பாதிக்கப்படு கிறது. எனவே, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும்.” என்றார்.