தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ஏ.முருகானந்தம்-வாசுகி தம்பதியரின் மகள் எம்.இலக்கியா-டி.எஸ்.வி.சூரிய வெங்கட ராம்குமார் திருமண வரவேற்பு வியாழனன்று ( மே 11 ) தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், மணமக்கள் ‘தீக்கதிர்’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ5 ஆயிரம் வழங்கினர். இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன், மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.