tamilnadu

img

மயிலாடுதுறையில் கடல் சீற்றம் கடலோர கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் புதிதாக அமைத்த சாலை துண்டிப்பு; கோவில்கள் சேதம்

மயிலாடுதுறை,  நவ.29 - மயிலாடுதுறை மாவட் டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் கட லோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக மயிலாடு துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 4  நாட்களாக  கனமழை பெய்து  வருகிறது.  கடல் சீற்றம் காரண மாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவ.21 அன்று முதல் 28 மீனவ கிராம மக்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  இந்நிலையில் தரங்கம் பாடி அருகே சின்னங்குடி மீனவ கிராமத்தில் தற்போது கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடிக்கு மேல் அலை எழுவதால் கடல் நீர் கரையைத் தாண்டி  ஊருக்குள் புகுந்துள்ளது. தொடர்ந்து கரையைத் தாண்டி கடல் நீர் உட்புகுந்து  வருவதால், கடந்த மூன்று  மாதத்திற்கு முன்பு அமைக்கப் பட்ட சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை (தார் போடப்படவில்லை) துண்டிக்கப்பட்டுள்ளது.   கடல் அரிப்பால் கடற் கரை அருகில் உள்ள கோவில் கள் சேதம் அடைந்துள்ளன. கடல் நீர் கரையைத் தாண்டி வருவதால் பாது காப்பில்லாத சூழலில் இருப்பதாகவும், கருங்கல்  அலை தடுப்புச் சுவர்  அமைத்து தர வேண்டும்.  தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 30 ஆண்டு களாக  சின்னங்குடி மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தங்களின் கோரிக் கைகள் இதுவரை நிறை வேறவில்லை என மீனவ  பஞ்சாயத்தார்கள் கூறுகின்ற னர். அதோடு, தூண்டில் வளைவு அமைக்க 26 கோடி ரூபாய் தமிழக அர சால் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு அரசாணை வெளி யிடாததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.  சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடல் நீர் கரை யைத் தாண்டி ஊருக்குள் புகுந்த நிலையிலும், இது வரை அதிகாரிகள் ஒரு வரும் வந்து பார்வை யிடவில்லை. உடனடியாக தமிழக அரசு ஆணை வெளியிட்டு, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.  கடல் அரிப்பை தடுப்ப தற்கு நிதி ஒதுக்கீடு செய்து  கருங்கல் அலை தடுப்புச்  சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.