tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தலித் இளைஞரின் கைகளை வெட்டி கொலைவெறியாட்டம்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

பூமிநாதன் வாங்கிக் கொடுத்த புல்லட் வண்டியை முனியன் கோவிலில் வைத்து பூஜை செய்து விட்டு, வீட்டிற்கு குடும்பத்துடன் திரும்பிய போது அவர்களது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. 
இதுகுறித்து அன்றே சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

கைகளை குறிவைத்து அரிவாள் வெட்டு


இந்நிலையில் 12.02.2025 அன்று மாலை 6.30 மணியளவில் புல்லட் வண்டியில் கல்லூரிக்கு சென்று வந்த அய்யா
சாமியை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாதியவாதிகளான வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகியோர் பைக்கை மறித்து “இந்த சாதியில இருந்துகிட்டு, எங்க முன்னாடியே எப்படிடா புல்லட் ஓட்டலாம், கை இருந்தால்தானே பைக் ஓட்ட முடியும்” என மிரட்டி, இரு கைகளையும் வாளால் வெட்டியுள்ளனர். 


இரண்டு கைகளிலும் வெட்டுப்பட்ட அய்யாசாமி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்
பட்டார். அங்கிருந்து இரவு மதுரை ராஜாஜி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

கடுமையான காயங்களுடன் அய்யாசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பும் அடங்காத சாதி வெறியால் சாதியவாதிகள் அய்யாசாமியின் வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.4

 

கொலைக் குற்றப் பின்னணி கொண்ட சாதிவெறியர்கள்


இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது தாய் செல்லம்மாள் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், 27/2025 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இடது கை நரம்பு வெட்டப்பட்ட அய்யாசாமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வியாழனன்று காலை ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

2023-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட புகாரில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது வன்மையாக கண்டிக்கத் தக்கது.


இளைஞர் அய்யாசாமிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்


மேலும், கடுமையான காயம் ஏற்பட்டு இருப்பதால் 326 பிரிவு, சைக்கிள் மற்றும் பைக் ஓட்டுவதை தடுக்கும் பிரிவு SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 3 (1) ( za) (B) பிரிவை வழக்கில் இணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்டத்தின்படி தீருதவியும், மருத்துவ உதவிகளும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இரு கைகளிலும் கடும் பாதிப்பை சந்தித்துள்ள அய்யாசாமிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அய்யாசாமியை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் செ.முத்துராணி, மாநிலக்குழு உறுப்பினர் செ. ஆஞ்சி ஆகியோர் நேரில் சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்ததுடன், அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.


தாக்குதலுக்கு உள்ளான அய்யா
சாமியின் வீட்டையும், அவரது சித்தப்பா பூமிநாதனையும் மேலப்பிடாவூரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிவகங்கை மாவட்டத் தலைவர்கள் ஆர். வீரையா, எஸ்.முத்துராமலிங்கபூபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை!

அமைச்சர் மகேஸ் எச்சரிக்கை 
பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மகேஸ், “பள்ளிகளில் பாலியல் புகார்கள் எழாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் புகார் குறித்து உடனடி யாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி அரசியல் செய்ய இடம் கொடுக்கக் கூடாது. பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மொத்தமாக 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 12 லட்சத்து 93 ஆயிரத்து 494 பேர், மாணவியர் 12 லட்சத்து 14 ஆயிரத்து 379 பேர். 48 ஆயிரத்து 987 தனித்தேர்வர்கள் மற்றும் 585 சிறைவாசிகளும் தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில், மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து குறைபாடு என எந்தத் தவறுகளும் இல்லாமல் பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.