tamilnadu

மாணவிகளுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சைபர் கிரைம் காவல்துறை விசாரணை?

மதுரை, மே 12- மதுரை நகரில் உணவகம், மொபைல் போன் கடைகள் நடத்தும் மூன்று இளை ஞர்கள் கல்லூரி, பள்ளி மாணவிகள் சிலரை தங்களது வலையில் சிக்க செய்து, அவர்களை தவறாக வழி நடத்தி பணம் சம்பாதிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது. இது தொடர்பாக மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிய இத்தகவல் உண்மையா, வேண்டு மென்றே பரப்புகிறார்களா இத்தகவலை பரவவிட்டவர்கள் யார் என்ற கோணத்தில் சைபர் கிரைம் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியர் யாரும் புகார் கொடுக்க தயங்கும் நிலையில், சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களே தாமாக முன்வந்து, தங்களது தொழிலுக்கு எதிராக யாரோ இது போன்ற தவறான கருத்துக்களை தங்கள் மீது பரப்புகின்ற னர். அவர்களை அடையாளம் கண்டு நட வடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் மதுரையில் பரவிவரும் இந்ததகவல் மக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘‘கடந்த ஒருவாரமாக சமூக வலை தளம், வாட்ஸ்ஆப்-பில் இந்தத் தகவல் கள் பரவிவருகின்றன. எங்களது கவ னத்துக்கும் வந்துள்ளதால் உண்மையா? என்ற அடிப்படையில் விசாரிக்கிறோம். காவல் ஆணையரின் சிறப்பு காவல் குழுவை இது குறித்து விசாரிக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத் தில் தகவல்களை கசியவிட்ட நபர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினரும் ஆய்வு செய்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் சில ஆதா ரங்களை பொறுத்தே அந்த சம்பவம் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்த முடி யும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தா லும் புகார் கொடுக்கலாம் என்றனர்.