சென்னை,டிச.19- அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் (ஐப்சோ) 37 பேர் கொண்ட கலைக்குழு, டிசம்பர் 15 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து வியட் நாம் சென்றது. கடந்த ஆண்டு டிசம்பரில் வியட்நாம் கலை க்குழு இந்தியா வந்ததன் தொடர்ச்சியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. டிசம்பர் 16 முதல் 21 வரை நடைபெறும் இந்தப் பயணத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி களை நடத்த உள்ளனர். ஹனாய், ஹோசி மின் நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் நிகழ்ச்சிகள் நடை பெறும். 15 பேர் கொண்ட குழு ஐப்சோ அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஹர்ச் சந்த் சிங் தலைமையிலான குழுவில், அகில இந்திய துணைத் தலைவர் மருத்து வர் ஜி.ஆர். இரவீந்திரநாத், செயலாளர் ஐ.ஆறுமுகநயி னார், புதுச்சேரி மாநிலத் தலைவர் நாரா.கலைநாதன் ஆகியோர் இடம்பெற்றுள் ளனர். சிபிஎம் மூத்தத் தலைவர் அ.சவுந்தரராசன், மதிமுக துணைப் பொதுச் செயலா ளர் மல்லை இ. சத்தியா, சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன் (திமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), காங்கிரஸ் சென்னை மாந கர மாமன்ற உறுப்பினர் ஜெ.எஸ்.டில்லி பாபு உள்ளி ட்டோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஐப்சோ தேசியக் குழு உறுப்பினர்கள் மருத்து வர் ஏ.ஆர். சாந்தி, கே.சி. கோபிக்குமார், புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ராமச் சந்திரன், கீதானந்தன் ஆகி யோரும் குழுவில் இணைந் துள்ளனர். இக்குழுவினர் வியட் நாம் துணை குடியரசுத் தலை வர் வோ தி அன் சுவான், கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்கள், இளைஞர்-மாண வர் அமைப்புகளின் தலை வர்கள் மற்றும் உயர் அதி காரிகளைச் சந்தித்து உரை யாடவுள்ளனர். உலக சமா தானக் கவுன்சில் தலைவர் பல்லப்சென் குப்தா இந் நிகழ்ச்சிகளில் பங்கேற் கிறார். வியட்நாம்-இந்திய நட்புறவுக் கழகம் மற்றும் வியட்நாம் நட்புறவு அமைப்புகள் இந்நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்துள் ளன. முதல்வர் வாழ்த்து கடந்த ஆண்டு டிசம்ப ரில் வியட்நாம் கலைக்குழு சென்னை மற்றும் புதுச் சேரிக்கு வருகை தந்த போது, சென்னையில் நடந்த தொடக்க விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கலந்துகொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வாழ்த்துச் செய்தி அனு ப்பியிருந்தார். புதுச்சேரி நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி பங்கேற்றார்.