tamilnadu

img

டெலிகிராமில் க்ரோக் ஏஐ அம்சம்!

டெலிகிராமில் க்ரோக் ஏஐ அம்சம்!

டெலிகிராம் (Telegram) தளத்தில் க்ரோக் ஏஐ (Grok AI) சாட்பாட்டை பயன்படுத்தும் அம்சத்தை எக்ஸ் (டுவிட்டர்) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரோக் ஏஐ, ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும். இது சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற ஏஐ மாடல்களுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் பயனர்கள் தங்கள் கேள்விகளை பதிவிட்டு “@Grok” என்று டேக் செய்தால், அதற்கான பதில்களை க்ரோக் ஏஐ வழங்குகிறது. இந்த ஏஐ சாட்பாட் தற்போது டெலிகிராம் தளத்திலும் கிடைக்கிறது. டெலிகிராமில் க்ரோக் ஏஐ பயன்படுத்துவதற்கு பயனர்கள், X Premium மற்றும் Telegram Premium ஆகிய இரண்டிலும் சந்தாதாரராக இருக்க வேண்டும். டெலிகிராமில் க்ரோக் ஏஐ-யை பயன்படுத்துவது எப்படி? டெலிகிராம் செயலியை முதலில் அப்டேட் செய்து அதன் சமீபத்திய பதிப்பை பயனர்கள் கொண்டிருக்க வேண்டும். பின்னர், டெலிகிராமில் க்ரோக் சாட்பாட்டை கண்டறிய எக்ஸ் அல்லது டெலிகிராமிலிருந்து அதிகாரப்பூர்வ இணைப்பைத் தேடி அதில், உங்கள் எக்ஸ் ப்ரீமியம் கணக்கை log-in செய்து verification செய்ய வேண்டும். Verification முடிந்தவுடன், நீங்கள் க்ரோக் சாட்பாட்டை டெலிகிராமில் பயன்படுத்தலாம்.

ஐபோன் பயனர்களுக்கென வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்!

ஐபோன் பயனர்கள், வாட்ஸ் அப் மூலம் அழைப்பு கள் மற்றும் மெசேஜ்களை அனுப்புவதை இயல்புநிலை (Default) ஆப்ஷனாக மாற்றும் அம்சம் கொண்டுவந்துள்ளது. ஐஓஎஸ் 18.2 உடன் வாட்ஸ் அப் ஒருங்கிணைந்து இந்த அம்சத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு, பயனர்கள் தங்கள் ஐபோனில் உள்ள ஆப் ஸ்டோர் வழியாக வாட்ஸ் அப்பின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்து புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்டதும், ஐபோனில், Settings > Apps > Default Apps என்பதற்குச் சென்று, வாட்ஸ் அப்பை தங்கள் இயல்புநிலை அழைப்பு மற்றும் மெசேஜ் அனுப்பும் பயன்பாட்டுக்காக தேர்வு செய்துகொள்ளலாம்.

விஷுவல் இண்டெலிஜன்ஸ் உடன் உருவாகிறது ஆப்பிள் வாட்ச்!

கேமரா மற்றும் விஷுவல் இண்டெலிஜன்ஸ் உடன் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஸ்மார்ட் பல்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ளன. குறிப்பாக, இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவு, தூக்கத்தின் தரம் உள்ளிட்ட உடல்நலனை கண்காணிக்கும் அம்சம், சிரி (Siri), வாலட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஸ்மார்ட் வாட்ஸ்கள் கொண்டுள்ளன.  இந்நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள் கேமரா மற்றும் விஷுவல் இண்டெலிஜன்ஸ் உடன் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஐபோன்களில் மட்டுமே உள்ள விஷுவல் இண்டெலிஜென்ஸை, தற்போது ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் ஆப்பிள் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது.