tamilnadu

img

குடவாசலில் கிரிக்கெட் வலைப்பயிற்சி திறப்பு விழா

குடவாசலில் கிரிக்கெட் வலைப்பயிற்சி திறப்பு விழா

குடவாசல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட கிரிக்கெட் வலைப்பயிற்சி திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடவாசல் விளையாட்டு நலச் சங்க தலைவர் கே.ராஜா தலைமை வகித்தார். திறப்பு விழாவில் பங்கேற்ற திருவாரூர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சிவசுப்ரமணி பயிற்சி அரங்கத்தை திறந்து வைத்து உரையாற்றினார். செயலாளர் வி. பசுபதி, கிரிக்கெட் பயிற்சியாளர் சந்துரு, திருவாரூரைச் சார்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஸ்கோரர் மதன் ஆகியோர் பணியை சிறப்பிக்கும் வகையில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. முன்னதாக, விளையாட்டு நல ஆர்வலர் எஸ்.தினகரன், குடவாசல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் எம்.ஆர். தென்கோவன், குடவாசல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.முருகேசன், வழக்கறிஞர் ஜி.டி. சிவசங்கரன் மற்றும் மூலங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடவாசல் விளையாட்டு நலச் சங்கத்தின் துணைத்தலைவர் ஏ. உமர்ஹத்தா, செயலாளர் எம். ராஜா மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு நல ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்மை அறிவியல் கல்லூரி  மாணவிகளின் களப்பயணம் துவக்க விழா

துக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகளின் களப்பயணத் துவக்க விழா திருமயம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு உழவர் பயிற்சி நிலையத்தின் துணை வேளாண்மை இயக்குனர் சி.ஜெயராமன், வேளாண்மை உதவி இயக்குனர் நா.உமா, துணை இயக்குனர் எம்.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  அவர்கள் பேசும்போது, நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதோடு, வேளாண்துறை மாணவர்கள் விவசாயிகளின் சொந்த அனுபவங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றனர். நுண்ணுயிர் நீர்ப்பாசனம் குறித்து மைக்ரோ இரிக்கேஷன் நிறுவனர் எஸ்.சிங்கதுரை, விவசாய அனுபவம் குறித்து முன்னோடி விவசாயி கே.ஆர்.கணேசன் எடுத்துரைத்தனர். பிஆர்ஏ டெக்னிக் வரைபடம் வாயிலாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாணவிகள் வெளிப்படுத்தினர். முன்னதாக மாணவி கு.அபிராமி வரவேற்க, மாணவி ஜெ.அக்ஷயா நன்றி கூறினார். மாணவி ம.அபர்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.