128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விளையாட்டு உலகில் முதன்மையாக இருப்பது ஒலிம்பிக் தொடர் ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரின் 34ஆவது சீசன் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. டி-20 வடி வத்தில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி யில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் அமெரிக்காவுடன் சேர்ந்து மொத்தம் 6 அணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1900 ஆம் ஆண்டு பாரீஸ் (கிரிக் கெட்) ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்கவில்லை. இத்தகைய சூழலில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கில் கிரிக்கெட் உட்பட 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப் பட்டன என்பது குறிப்பி டத்தக்கது.
புதிதாக சேர்க்கப்பட்ட 4 விளையாட்டுகள்
1. பேஸ்பால் (ஆடவர்) / சாப்ட்பால் (மகளிர்) 2. பிளாக் கால்பந்து (ரக்பி வகையை சார்ந்தது) 3. லாக்ரோஸ் (ஹாக்கி வகையை சார்ந்தது - ஹாக்கி போன்ற வலையில் பந்தை தூக்கி கொண்டு கோலடிக்க வேண்டும்) 4. ஸ்குவாஷ் அமெரிக்காவிற்காக புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டதா? புதியதாக 5 விளையாட்டுகளில் கிரிக்கெட், ஸ்குவாஷ் மட்டுமே பொதுவான விளையாட்டுகள் ஆகும். பேஸ்பால் / சாப்ட்பால், பிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய 3 விளையாட்டுகள் அமெரிக்காவில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும். அதாவது 3 விளையாட்டுகளிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு என்பதால், அமெரிக்காவுக்காக புதிதாக விளையாட்டுகளை சேர்க்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
ஐபிஎல் 2025
லக்னோ - குஜராத்
நேரம் : மாலை 3:30 மணி
இடம் : எகானா மைதானம், லக்னோ, உ.பி.,
ஹைதராபாத் - பஞ்சாப்
நேரம் : இரவு 7:30 மணிக்கு
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா