சென்னை, பிப். 11 - ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் இருக்கும் 86 ஆயிரம் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கும் தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29 ஆயிரத்து 187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு இடங் களில் வசிக்கும் 57 ஆயிரம் குடும்பங் களுக்கும்- ஒட்டுமொத்தமாக 86 ஆயிரம் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிட தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தாக வருவாய்த்துறை அமைச்சர் தெரி வித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மகிழ்ச்சி யுடன் வரவேற்கிறது.
எளிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கை
ஏழை - எளிய அடித்தட்டு மக்கள், பல ஆண்டுகளாக அரசுப் புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, பெல்ட் ஏரியா, நீர்நிலைப் பகுதிகளில் குடியிருந்து வரு கின்றனர். அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு இயக்கங்களை மாநிலம் முழு வதும் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கங்களில் பங்கேற்றனர். இந்நிலையில், நீண்டகாலமாக உள்ள பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
வகை மாற்றம் செய்தும் பட்டா வழங்க வேண்டும்!
அதேநேரத்தில், ஏற்கெனவே நீர்நிலை மற்றும் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கில் பல ஆண்டுகளாக சாதாரண மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வருகிற ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு என்கிற பகுதி குடியிருப்பு பகுதிகளாக மாறி இனி வேறு வகையில் பயன்படுத்த முடியாததாகவும், பல லட்சக்கணக்கான மக்களின் குடியிருப்பு உரிமை சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட பகுதி களில் வசிக்கக் கூடிய மக்களுக்கும், அரசு ஆவணங்களில் உரிய மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப் பிட்டுள்ளார்.