tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு நிறைவு விழா

அவர் வசித்த வீட்டிலிருந்து வந்த நினைவு ஜோதி

திருநெல்வேலி,ஜூலை 16-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும் மூத்த  தலைவருமான தோழர் ஏ.நல்ல சிவன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம்  நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. 1940-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி யில் தன்னை இணைத்துக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளிகள், இதர பகுதி தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என  அனைத்து பகுதி மக்களின் உரிமைப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர். விடுதலைப் போராட்டத் தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கொடு மைகள், சித்ரவதைகளை அனுபவித்த வர்.  தனது இளம் வயதிலேயே கொலை வழக்கு மற்றும் நெல்லை சதி  வழக்கு போன்றவற்றைச் சந்தித்தவர்.

எத்தனை அடக்குமுறைகள், மிரட்டல் கள் ஏவி விடப்பட்டபோதும் நெஞ்சுறு தியுடன் எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர். தமிழக அளவில் நடைபெற்ற  எண்ணற்ற தொழிலாளர்கள் போராட்ட ங்களில் தலைமை தாங்கி தமிழக தொழிற்சங்க தலைவராக - சிஐடியு வின் தலைவர்களில் ஒருவராக பரிணமித்தவர். 1969-ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி யின் எட்டாவது மாநில மாநாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மாநிலச் செயலாளராக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் தோழர் ஏ.நல்லசிவன். அவரது நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டம்  ஞாயிறன்று அம்பா சமுத்திரத்தில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமை வகித்தார். அம்பா சமுத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார். அரசியல் தலைமைக்குழு  உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி. சம்பத், ஆர்.கரு மலையான், மாநிலச் செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப் பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.கற் பகம், ஆகியோர்  உரையாற்றினர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், தென்காசி மாவட்டச் செயலாளர் உ. முத்துப்பாண்டியன்  மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நினைவு  ஜோதி 

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக பிரம்மதேசத்தில் இருந்து தோழர் ஏ.நல்லசிவன் நினைவு ஜோதி எடுத்து வரப்பட்டது. ஜோதிப் பயண நிகழ்விற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மோகன் ஜோதி யை எடுத்துக் கொடுக்க மூத்த தலை வர் பி.தியாகராஜன் பெற்று கொண்டார்.  தோழர் ஏ.நல்லசிவன் வசித்த வீட்டில் இருந்து ஜோதிப்பயணம் புறப் பட்டது. அப்போது அருகில் வசிப்ப வர்கள், நாங்கள் வெளியூரி லிருந்து இங்கு வந்து வசிக்கிறோம். எங்களது மூதாதையர்களுக்கு நல்லசிவனை தெரிந்திருக்கும். இந்த நிகழ்வின் மூலம் எங்கள் ஊரிலிருந்து கட்சியின் தலைவராக ஒருவர் இருந்துள்ளார் என  நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றனர். தோழர் ஏ.நல்லசிவன் நினைவு ஜோதியை மகாலட்சுமி(18), யதீன்சகா (17), ஸ்ரீ ஹரி கிருஷ்ணா (17), ஸ்ரீ ராம சுப்பு (17), ரித்தீன் சகா(11), ஜெய துர்கேஷ் (13) ஆகியோர் தொடர் ஓட்ட மாக பிரம்மதேசத்தில் இருந்து அம்பா சமுத்திரத்திற்கு கொண்டு வந்தனர்  இவர்களில் மகாலட்சுமி அம்பா சமுத்திரம் கலை அறிவியல் கல்லூரி யில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார், ரித்தீன் சகா 8 மும் வகுப்பு படித்து வருகிறார். மற்றவர்கள் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர், ஜெயதுர்கேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்திருக்கிறார்.  இந்த நிகழ்வில் அம்பை ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ்,  ஒன்றியக்குழு உறுப்பினர் மகாதேவன், பிரம்மதேசம் கிளை உறுப் பினர்கள் வைரமுத்து, கைலாசம், சுப்பு,  அருணாச்சலம் மற்றும் தோழர் நல்ல சிவனை அறிந்தவர்கள் பங்கேற்றனர்.