tamilnadu

திருத்தணி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருத்தணி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குக!
தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருத்தணி அருகே நடந்த சாலை விபத்தில் பலியானோரின் 4 பேரின் குடும்பங் களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க  வேண்டும் என்று தமிழக அரசை மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

வேதனையளிக்கும் துயரச் சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கே.ஜி. கண்டிகையில் வெள்ளிக் கிழமையன்று (07.03.2025) லாரி - அரசு  பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே  கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலா ளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்ததும், பெண்கள், குழந்தை கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங் களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோரவிபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

சப்ளையர் வேலைக்குச் சென்ற நெசவாளர்கள்

அம்மையார்குப்பம் பகுதியில் விசைத் தறி தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக் கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலையில்லாததால் தங்களது குடும்ப  வறுமை காரணமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 35 நெசவுத் தொழிலாளர்கள் சென்னையில் உள்ள திருமண மண்ட பத்தில் உணவு சப்ளையர் வேலைக்கு செல்வ தற்காக பேருந்தில் பயணம் செய்தபோது இந்த கோரவிபத்து நடந்துள்ளது. மேலும்  விபத்து நடந்த பகுதியில் நான்கு வழிச் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறு வதால் தடுப்பு வேலிகள் மற்றும் பணிகள்  நடைபெறுவதற்கான எச்சரிக்கை பலகை  எதுவும் இல்லாததன் விளைவே இந்த கோர விபத்திற்கு காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ. 3 லட்சமும், மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ. 1  லட்சமும், காயம் ஏற்பட்டவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி செய்துள்ளார்.

வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள்

இருப்பினும், இறந்த நெசவுத் தொழிலா ளர்கள் அனைவரும் நிரந்தர வேலை வாய்ப்பின்றி தினசரி கூலி வேலை செய்பவர் கள் என்பதால் அவர்களது குடும்பங்களின்  எதிர்கால நலனைக் கருதி உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்  நிவாரணமும் - அரசு வேலையும், வீடில்லாத வர்களுக்கு அரசு வீடும், குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்துகிறது.  படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிப்பதற்கும் தமிழக அரசு   முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக  அம்மையார் குப்பத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நெசவு உரிமையாளர்களையும், தொழிலா ளர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை விரைந்து ஏற்படுத்திட  வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் குறிப் பிட்டுள்ளார்.