17 வருவாய் கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர்
நாகர்கோவில், ஆக.14- 17 வருவாய் கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை வனப்பகுதியாக மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. ஏற்கனவே தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம், வன விலங்கு சரணாலயம், பறவைகள் சர ணாலயம் என மாவட்டத்தின் பெரும் பகுதி மக்கள் வாழ முடியாத இடமாக மாறிவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலி யல் அதிர்வு தாங்கு மண்டலம் என்கிற பெயரில் வனவிரிவாக்கம் செய்யும் முயற்சி நடக்கிறது. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் சம்மந்தமாக 2019 செப்டம்பர் 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு கருத்து கணிப்பு கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசின் இத்திட் டத்தை எதிர்த்தனர்.
எனவே இந்த அரசாணையை தமி ழாக்கம் செய்து வெளியிடுவது மற்றும் கிராமங்கள் தோறும் மக்களின் கருத்து கேட்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் கீழ்மட்டங்களில் மக்கள் கருத்து கேட்பு நடத்தாமலும், அரசா ணையை தமிழாக்கம் செய்து மக்கள் பார்வைக்கு வைக்காமலும் தன்னிச் சையாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல திட்டத்தை அமுல்படுத்து வதற்கான ஆயத்த பணிகளை அரசும், வனத்துறையும் துவங்கியுள்ளதாக தெரிகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடையால், திற்பரப்பு, தும்பக்கோடு, பொன்மனை, சுருளோடு, அருமநல் லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகிய பாண்டிபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர், குலசேகரம் என 17 வரு வாய் கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வனப்பகுதி யாக மாற்றப்படும். ஏற்கனவே தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம், வனவிலங்கு சர ணாலயம், பறவைகள் சரணாலயம் என மாவட்டத்தின் பெரும் பகுதி மக்கள் வாழ முடியாத இடமாக மாற வுள்ளது. எனவே இத்திட்டத்தை கை விட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று மாவட்டம் முழுவதும் நூறு மையங்களில் கறுப்பு கொடி ஆர்ப் பாட்டம் நடைபெறும்.
கொரோனாவும் அரசுகளும்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கிராமங்களிலும் பரவுவதால் தமிழக மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தமிழக அரசு வழங்கும் நிவா ரணம் யானை பசிக்கு சோளப்பொரி போன்று உள்ளது. நோய் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு மாறாக பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண் டர் விடுவதில் தான் அதிமுக அரசு முனைப்பு காட்டுகிறது. இதில் அடுக்க டுக்கான ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் நோயா ளிகளுக்கான அனைத்து செலவுகளி லும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு நிதி அளிக்காமல் மத்திய அரசு தமிழ கத்தை வஞ்சிக்கிறது. கொரோனா காலத்தை பயன்படுத்தி மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறது. ரயில்வே உட்பட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்பனை செய்கி றது. இந்திய விவசாயத்தை கார்ப்ப ரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான அவசர சட்டங்களை பிறப்பித்துள் ளது. கூட்டுறவு நிறுவனங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இயற்கை வளங் களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையின்றி சூறையாட சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீடு அறிக்கையை மாற்றியுள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு வழங்க மறுப்பது, கல்வியை வணிக மயமாக்கும் புதிய கல்வி கொள்கை, ஏழை மற்றும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களிடமிருந்து கல்வியை பறிப்பது, தொழிலாளர்கள் உரிமை களை பறிப்பது, போராடி பெற்ற 8 மணி நேர வேலை என்பதை 12 மணி யாக்குவது, பேச்சுரிமை, எழுத்துரிமை யை பறிப்பது, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அரா ஜக செயல்களை மத்திய அரசு அமுல் படுத்தி வருகிறது.
500 மையங்களில் ஆர்ப்பாட்டம்
இவற்றை கண்டித்து தேசம் தழு விய அளவில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் மக்கள் இயக்கத்தை முன்னிட்டு கன்னி யாகுமரி மாவட்டத்தில் 20 முதல் 23 ஆம் தேதி வரை லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக, வீதி வீதியாக பிரச்சாரம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் 25,26 தேதிகளில் மாவட்டத்தில் குறை யாமல் 500 மையங்களில் ஆர்ப்பாட் டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் ஊராட்சிகளில் வீடுகளுக்கான குடி நீர் வினியோகத்தை தனியாரிடம் ஒப்ப டைக்கும் முயற்சியை கைவிட கேட்டும் கட்சியின் மாவட்டக்குழுவில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆன்லைன் மூலம் நடந்த கூட்டத் திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் ஏ.வி. பெல்லார்மின் தலைமை வகித்தார். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது, மாநிலக்குழு உறுப் பினர் உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.