திருப்பூர், பிப். 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி. மூர்த்தி (60) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம், வியாழக்கிழமையன்று தியாகி பழனிசாமி நிலை யத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.ஜெயபால் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத் தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு, மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் நடை பெற்ற மாநில மாநாட்டில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செ.முத்துக் கண்ணன் தேர்வு செய்யப் பட்ட நிலையில், தற்போ தைய திருப்பூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டார். புதிய மாவட்டச் செய லாளராக சி. மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினராக கி. கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினராக எஸ். பிரவீன்குமார் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.