புதுச்சேரி, அக்.30- கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பு 2019-யை திரும்ப பெறக்கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகூர் தொகுதிக்கு உட்பட்ட மூர்த்தி குப்பம், புதுகுப்பம் ஆகிய கடற்கரை சார்ந்த கிராமத்தில் வருவாய்த்துறையினர் நிலங்களை கையகப் படுத்தும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். முழுமை பெறாத கடற்கரை ஒழுங்குமுறை மண்டல வரைவு அறிக்கை 2019யை உடனே திரும்ப பெற வேண்டும். நிலம் கையகப்படுத்தும் நட வடிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நரம்பை, பனித்திட்டு ஆகிய மீனவ கிராமங்களில் சுத்த மான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றி தர கோரி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி எல்லை பகுதியான கன்னிய கோவில் வருவாய்துறை அலுவலகம் எதி ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் கள் பெருமாள், தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ், தமிழ்நாடு மீன்பிடி தொழி லாளர் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கலியன், இளவரசி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் மீனவ சங்க நிர்வாகிகள் செல்வநாதன், கலைஞானம், ஜெயந்தி மற்றும் இடை கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளான மீனவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக புதுச் சேரி அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கையை கைவிடக் கோரி கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.