tamilnadu

img

தீட்சிதர்களை கைது செய்யக்கோரி சிதம்பரத்தில் சிபிஎம் போராட்டம்

சிதம்பரம், ஜூன் 8- சிதம்பரம் நடராஜர் கோவிலில் சொத்து கணக்குகளை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலைய த்துறை அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கீழ வீதி கோயில் வாயிலில் புதனன்று  (ஜூன் 8) ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் நகரச் செயலாளர் ராஜா தலை மை தாங்கினார். மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், முத்துக் குமரன், ஜெயசித்ரா, பரங்கிப்பே ட்டை ஒன்றியச் செயலாளர்கள் விஜய், ஆழ்வார், கீரப்பாளையம் செல்லையா, குமராட்சி மனோகரன், புவனகிரி ஸ்டாலின் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெமினி ராதா, சமயமூர்த்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். கோவில் சொத்து கணக்கை காட்ட மறுக்கும் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதைக் கண்டித்தும், கோவிலை இந்து சமய  அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டியும் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரண்டாம் நாளும் தீட்சிதர்கள் முரண்டு

நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கோவில் சொத்துக்கள் தவறான வழி யில் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து அறநிலையத் துறை யின் சட்ட விதிகளின்படி அங்கீகரிக்கப் பட்ட சொத்துப் பதிவேடு உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்வதற்காகச் செவ்வாய்கிழமை கோவிலுக்குள் சென்ற அதிகாரிகள்  காலை 9 மணி  முதல் இரவு 7 மணிவரை  காத்திருந்த னர். அவர்களை சூழ்ந்து கொண்டு தீட்சிதர்கள், சட்டப்படி நீதிமன்ற உத்த ரவு பெற்று வந்தால் அனுமதிப்பதாக  கூறினர். இதனால் கோவிலில் இருந்து திரும்பிச் சென்ற இந்து  சமய அறநிலையத்துறை  அதிகாரிகள் புதன்கிழமை இரண்டாவது நாளாக ஆய்வு செய்ய சென்றபோதும் இதே  கருத்தை தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

கட்டிடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

பின்னர்  அதிகாரிகள் கோவிலில் பழைமைவாய்ந்த கட்டிடங்கள் மாற்றி  அமைக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது, கருவறையில் குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படுவது, பக்தர்களை தீட்சிதர்கள் எவ்வாறு மதிக்கிறார்கள் என்பது குறித்தும் கோவிலில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த அறிக்கை இந்து சமய அற நிலைத் துறை ஆணையரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் ஆணையர் அர சுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை யை எடுப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.