அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்: மீட்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கரூர், மே 6 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட இரும்பூதிபட்டி அரசு நடு நிலைப் பள்ளிக்கு மேற்கு பகுதியில் உள்ள சர்வே எண். 211-இல் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அரசு நிலம் உள்ளது. இந்நிலத்தின் நடைபாதையை திமுகவைச் சேர்ந்த தனிநபர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், பொதுமக்கள் அவசரத் தேவைக்கு செல்ல முடியாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி போக வேண்டியுள்ளது. மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நடைபாதையை மீட்டு பொதுமக்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதான பயன்பாட்டிற்கு கொண்டு வர கரூர் மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பூதிபட்டி கிளை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ரஜனி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், பி.ராஜு, ஒன்றியச் செயலா ளர் இரா. முத்துச்செல்வன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் பி.சங்கரநாரா யணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.பிரபாகர், எம்.சிவா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., நேரடி சேர்க்கை துவக்கம்
தஞ்சாவூர், மே 6 - தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியி யல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியி யல் (B.Ed.,) இரண்டாண்டு முழு நேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (M.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப் படிப்பிற்கு 2025-2026 ஆம் கல்வி யாண்டிற்கான நேரடிச் சேர்க்கை மே 5 (திங்கள்கிழமை) அன்று துவங்கி 31.7.2025 வரை நடைபெறவுள்ளது. இப்பட்டப் படிப்புக்கான வகுப்பு 01.08.2025 அன்று முதல் துவங்கப்படும். சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் 31.07.2025 வரை (பல்கலைக்கழக வேலை நாட்களில் மட்டும்) நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தொலைபேசி எண்.04362-226720, கல்வியியல் துறை சேர்க்கைத் தொடர் பான விசாரணைக்கு 750217760 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
குட்டையில் மண் எடுத்த லாரிகள் சிறைபிடிப்பு
திருச்சிராப்பள்ளி, மே 6 - திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் திருவெள்ளறை ஊராட்சிக் குட்பட்ட குன்னாகுளம் கிராமத்தில் உள்ள குட்டையில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் குட்டை யில் வண்டல் மண்ணுக்கு பதிலாக குட்டை மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் எடுத்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலை வர் முருகேசன், சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியன், குன்னாகுளம் கிளைச் செயலாளர் ரெங்க நாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனை முத்து ஆகியோர் தலைமையில் செவ்வா யன்று ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறைபிடித்தனர். பின்னர் இதுகுறித்து வட்டாட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில், “ஊர் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் குட்டையில் மண் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டார். இதையடுத்து லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை விடுவித்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு அரியலூர் ஆட்சியரிடம் மனு
அரியலூர், மே 6 - அரியலூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், உடையார்பாளையம் தாலுகா பாலசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் அளித்த மனுவில், “எங்கள் கிரா மத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கென்று வீட்டுமனை இல்லாததால் வாடகை வீட்டில் குடியி ருந்து வருகிறோம். அதிலும் ஒரே வீட்டில் 2, 3 குடும்பத்தினர் வசித்து வரும் நிலை தொடர்கிறது. இதனால் நாங்கள் மிகவும் அவதியடைந்து வருகிறோம். எனவே எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த இலவச வீட்டுமனை திட்டத்தின்கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகம் சார்பில், ஈமச் சடங்கிற்கான நிதியுதவி திட்டத்தின்கீழ் 9 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் என மொத்தம் ரூ.1.53 லட்சம் மதிப்பிலான நிதியுதவி காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் கட்சி அலுவலகத்தில், காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மலர்கொடி தலைமை வகித்தார். காரல் மார்க்ஸ் சம்பந்தமாக அவர் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் பல்வேறு விவரங்கள் குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, டி.அம்பிகா துரைஅருணன், ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் ஆகியோர் பேசினர்.