திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் போராட்டம்''
அரியலூர், ஏப்.18- மோடி அரசு நிறைவேற்றியுள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை ஜெயங்கொண்டம் காந்தி சிலை முன்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா, மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு இர.மணிவேல், ஏ.கந்தசாமி, டி.அம்பிகா, வி. பரமசிவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர் எம். வேல்முருகன் மற்றும் ஆர். இளவரசன், பி. பத்மாவதி, எஸ்.மீனா, எஸ்.குமார், டி.தியாகராஜன், ஆர். ரவிந்திரன், இ.மைதீன்ஷா, சாகுல் ஹமீது அக்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை மாநரச் செயலாளர் எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். ஜமாத் உலமா மாவட்ட பொருளாளர் ஹஜரத் உசேன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சு.மதியழகன், கி.ஜெயபாலன், டி.சலோமி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் இதயம் அப்துல்லா, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் கனி, தமிழர் வாழ்வுரிமை கட்சி முகமதுகனி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வி.ராமையா, அ.மணவாளன், ஆர். மணிமாறன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஏ. ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி முகமது மீரான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் டி.லட்சாதிபதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அண்டக் குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கோபால்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் டி.முத்து, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், விதொச மாவட்டத் துணைத் தலைவர் எம்.சண்முகம், ஜமாத் தலைவர் முகமது பாரூக், செயலாளர் குலாம் முகம்மது, பொருளாளர் சாகுல் ஹமீது, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜகுபரலி உள்ளிட்டோர் பேசினர். கும்பகோணம் கும்பகோணம் காந்தி பூங்கா அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகரக் குழு செயலாளர் கா. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ம. கண்ணன், மாமன்ற உறுப்பினர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பி.ஏ.எஸ் ரஹமத் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் முகமது சுல்தான், ஐக்கிய ஜமாத் பிஸ்மி சம்சு தீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவர் எம் எஸ் ரஹமத்துல்லா உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர், இஸ்லா மிய அமைப்பினர் ஏராளமானோர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருவிடைமருதூர் திருவிடைமருதூர் கடைவீதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் எம்.சங்கர் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் கண்டன உரையாற்றினர். நாச்சியார்கோவில் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றி யம் சார்பில், நாச்சியார் கோவில் கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.ஜெயபால் என.வி.கண்ணன் மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் முஹம்மது உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் மற்றும் இஸ்லாமி அமைப்பினர் ஏராளமா னோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் தலைமை வகித்தார். நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ஏ.கலையரசி, ஏ.கே. ராஜேந்திரன், எஸ். அகஸ்டின், டாக்டர் சி. கருணாகரன், மாவட்டக் குழு உறுப்பினர் இரா.எட்வின் ஆகியோர் வக்ஃபு சட்டத்தை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் புதிய ரயில்நிலையம் அருகில் வியாழன் மாலை சிபிஎம் மாவட்ட குழு சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம் எழுச்சியாக நடை பெற்றது. தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜ. முகமது உதுமான் உள்ளிட்ட ஜமாத் தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் கண்டனப் பேருரை ஆற்றினார். தர்ணா போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதி பாசு, எம்.சேகர்,பி.கந்தசாமி, கே.என்.முருகானந்தன் உள்ளிட்ட ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர். திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழ னன்று பாலக்கரை எடத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஜான்சி ராணி, மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிசெல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லெனின், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் சார்லஸ், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் ஹபிபுர் ரஹ்மான், மனித நேய மக்கள் கட்சி மாநில செயலா ளர் முகமது ரபீக், மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய கமிட்டிகள் சார்பில் லால்குடி ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகா, ரஜினிகாந்த், சிறுபான்மை மக்கள் நலக்குழு தங்கராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ரம்சான்அலி ஆகியோர் பேசினர். முடிவில் பசுபதி நன்றி கூறினார். மணப்பாறையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சுரேஷ், வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா மாநிலத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் சபர் அலி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் நஸ்ரின் பானு, மணப்பாறை சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் பிச்சைக்கண்ணு, சேதுராமன், அய்யாவு, கணபதி, பெரியசாமி மற்றும் இஸ்லாமியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மணப்பாறை வட்ட குழு உறுப்பினர் நவமணி நன்றி கூறினார். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அஞ்சல் நிலையம் அருகே வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி ஒன்றிய குழு, நகர குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் முத்தழகன், மனிதநேய ஜனநாயக கட்சி நூர்முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் அலாவுதீன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தென்றல் கருப்பையா, கே. தங்கராஜ், சிஐடியூ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, கவி பாலா உள்ளிட்டோர் கன்டன உரையாற்றினர். கரூர் கரூர் மாவட்டக் குழு சார்பில், தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.பாலா கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.கந்தசாமி, கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.