tamilnadu

இஸ்ரேலின் போர் வெறியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலின் போர் வெறியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 24-  ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட குழு சார்பில், மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கடந்த திங்களன்று அமெரிக்கா, ஈரான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது ஈரானிய இறையாண்மை மற்றும் ஐ.நா சாசனத்திற்கு எதிரான கடுமையான மீறலாகும். அமெரிக்காவின் இந்த அடாவடி செயலால், உலகளாவிய அளவில் பதற்றங்களை தூண்டும், மேற்கு ஆசியாவை சீர்குலைக்கும், கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படுவதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர்  மாவட்ட குழு சார்பில், திங்க ளன்று நம்பர் ஒன் டோல்கேட் பகுதி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை எம்எல்ஏ, ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிதம்பரம், நடராஜன், சம்பத், சுப்பு, மல்லிகா, பன்னீர்செல்வம், பாண்டியன் ஆகியோர் பேசினர்.  இதில், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன்,  சுப்பிரமணியன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.