tamilnadu

img

தேனியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அரண்மனைப்புதூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி தாலுகா குழு உறுப்பினர் ரெஜினா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாகராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.நாகராஜ், சத்யா, டி .ஜெயபாண்டி, தாலுகா குழு உறுப்பினர்கள் வீரமணி, ம.காமத்துரை, பெத்திலீஸ்வரன், கோ.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் கலால் விலை உயர்வுகளை வாபஸ் பெற கோரியும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொப்பம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் தொப்பம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அருள்செல்வன், ஒன்றியச் செயலாளர் என்.கனகு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.சின்னத்துரை ,கே.பி.நாதன், கே.முகமது இஸ்மாயில், எம்.பழனிச்சாமி, கே.சக்திவேல், கே.பார்வதி, கே.விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற  பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன்  கலந்து கொண்டு பங்குனி உத்திரத் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப்,   பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் உட்பட பலர் உள்ளனர்.