சேலம், ஜன.2- விவசாயிகளின் நிலத்தை அப கரிக்க அமலாக்கத்துறையை ஏவி விட்ட பாஜக சேலம் மாவட்ட நிர்வாகி மீதும், அதற்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோ ருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி யது. மேலும், அந்த சம்மனில் விவசாயி களின்சாதியை குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை அடிமட்ட விலைக்கு வாங்க முயன்ற பாஜக சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன், தனது செல்வாக்கை பயன்படுத்தி அமலாக்கத்துறையை ஏவியது பின்னர் அம்பலமானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் காவல் கண்கா ணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் மனு அளித்தனர். அம்மனு வில், விவசாயிகளின் நிலத்தை அப கரிக்க முயற்சிக்கும் பாஜக நிர்வாகி குணசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குண சேகரனுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை, வருவாய் துறை அலுவலர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.
இன்று ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து, அமலாக்கத் துறை விவசாயிகளுக்கு அனுப்பிய சம்மனில் சாதியை குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், அமலாக்கத் துறை யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரி வித்து புதனன்று (இன்று) சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர். முன்னதாக, இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் டார்வின், கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.