நீடாமங்கலம், செப்.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் நகரச் செயலாளர் தோழர் வி.தமிழ்மணி காலமானார். அவருக்கு வயது 68. நீண்ட காலம் உடல்நலக் குறை வினால் அவதிப்பட்டு வந்த இவர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று இரவு காலமானார். தோழர் தமிழ்மணி வேளாண் பொறியியல் துறையில் நீண்ட காலம் பொறியாளராக பணியாற்றியவர். அரசு ஊழியராகவும், அரசு ஊழியர் சங்க த்தின் போராட்டங்களிலும் பங்கேற்றவர். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் தமிழ்மணி, அனைத்து அரங்கங்களிலும் பங்கேற்று சிறப்பாக செயல் பட்டார். அவரது மறைவு குறித்து அறிந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி ஆகியோர் அவரது உட லுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலையில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சிகளுக்கு பின்னர் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு. ஒன்றி யச் செயலாளர் ஜான் கென்னடி தலைமை யேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், விவசாயிகள் சங்கத்தினர், மாதர் சங்கம் ரெ.சுமதி உள்ளிட்ட பலர் பேசினர்.