ஒன்றிய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் (ரயில்வே இணையமைச்சர் பிட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பி னர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தி யில் மட்டுமே பதிலளித்து வருகிறார். இதற்கு எதிராக தனது கண்டனத்தைப் பதிவு செய்யும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் (கேரளா) மலையாள மொழியில் கடிதம் எழுதி னார். இந்நிலையில், ஜான் பிரிட்டாஸின் கடிதத்திற்கு இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மோகன்தாஸ் பாய் ஆதரவு தெரிவித்து, மோடி அர சின் இந்தி திணிப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜான் பிரிட்டாஸின் டுவிட்டர் எக்ஸ் பதிவை டேக் செய்து மோகன்தாஸ் பாய் கூறுகையில், “தக வல் தொடர்புக்கு இந்தியை மட்டுமே நம்பியிருக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தவறானது. இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. உள்ளூர் மொழியிலோ ஆங்கிலத்திலோ பதிலைப் பெற குடிமக்களுக்கு உரிமை உண்டு. குடிமக்கள் மீது எந்த மொழியையும் திணிக்காதீர்கள்” என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.