tamilnadu

img

தலசேரியில் சிபிஎம் ஊழியர் படுகொலை

கண்ணூர், பிப்.21- தலசேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் ஹரிதாசன் (54) ஆர்.எஸ்.எஸ்.  குண்டர்களால் வெட்டிப்  படுகொலை செய்யப்பட்டார். மீனவரான ஹரிதாசன், திங்க ளன்று (பிப்.21) அதிகாலை 1.30 மணி யளவில் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது வீட்டின் முன்  வைத்து தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. ஞாயிறன்று மதியம் ஹரி தாசன் கடலுக்குச் சென்றார். திரும்பி வருவதற்காக காத்திருந்த ஒரு கும்பல் உறவினர்கள் முன்னிலையிலேயே அவரைத் தாக்கியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

, ஆனால் வழி யிலேயே அவர் இறந்தார். ஒரு கால்  துண்டிக்கப்பட்டு கைவிடப்பட்டிருந் தது. உடல் முழுவதும் ஆழமான காயங்கள் உள்ளன. அவரது உடல் பரி யாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை ஆர்எஸ்எஸ் தலை மைக்கு தெரிந்தே நடத்தப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கண்ணூர் மாவட்ட செயலாளர் எம்.வி.ஜெயராஜன் தெரிவித்துள் ளார். படுகொலையில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். இக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலச்சேரி நகராட்சி மற்றும் நியூமாஹி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திங்க ளன்று அழைப்பு விடுத்த முழு அடை ப்புக்கு (ஹர்த்தால்) பொதுமக்கள் ஆதரவளித்தனர். இதனிடையே ஹரிதாஸ் கொலை யாளிகள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.